நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது

நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.

தீமைசெய்தோரை மன்னியுங்கள்

1. வீண் பேச்சு பேசாதீர்.2.பாவங்;களை தவிர்ந்து கொள்ளுங்கள்.4. நீதி நேர்மையோடு வாழுங்கள். பிறர் மனம் புண்படும்டி நடவாதீர்கள்.5. ஏழைகளை மேலாக மதியுங்கள்.7. உறவினர்களை அரவணைத்துக் கொள்ளுங்கள்.8. அநியாயம் செய்தோருக்கு அருள் புரியுங்கள். தீமைசெய்தோரை மன்னியுங்கள்.9. உங்களால் பிறருக்குத்தொல்லை ஏற்படின் மன்னிப்புக் கேளுங்கள்.10. உங்கள் பொன்னான நேரங்களை அல்லாஹவை வணங்குவதிலும்,இறைஞ்சுவதிலும் பொருளீட்டுவதிலும்,தமது மனைவி,மக்கள், சமூகத்தாரின் கடமைகளை நிறைவேற்றுவதிலும் செலவிடுங்கள்.

அவன் விட்டுச் சென்ற மூன்றைத்

ஒருவன் மரணித்து விட்டால் பின்னர் இவ்வுலகோடு அவனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை - அவன் விட்டுச் சென்ற மூன்றைத் தவிர:
1. பயனுள்ள கல்வி
2. நிலையான தர்மம்3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் பிள்ளைகள்