நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே! ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 49:10முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். 49:11முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும். (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். அன்றியும், உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேச வேண்டாம். 49:12
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்

வாழ்வில் ஆரோக்கியத்துடன் இருக்க சில எளிய ஆலோசனைகள்:

வாழ்வில் ஆரோக்கியத்துடன் இருக்க சில எளிய ஆலோசனைகள்:
1. தினமும் அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன் உறக்கத்திலிருந்து மீண்டுவிடுதல்
2. தினமும் குறைந்தபட்சம் இரு வேளை (காலை மற்றும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்) பல் துலக்குதல்
3. தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரம் நடத்தல்
4. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்த்து காய்கறி, பழவகைகளை உணவில் அதிகம் சேர்த்தல்
5. இரவு முடிந்தவரை சீக்கிரமாகப் படுக்கைக்கு செல்லுதல்

வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருக்க சில எளிய ஆலோசனைகள்:

வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருக்க சில எளிய ஆலோசனைகள்:
1. மற்றவர் செய்யும் தவறுகளை மன்னித்தல்
2. இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் எளிய வாழ்க்கை வாழ்தல்
3. நடப்பவை அனைத்தையும் நல்லதற்கே என்ற எண்ணத்துடன் கவலை கொள்ளாமல் இருத்தல்
4. தினமும் குறைந்தது ஒருவருக்காவது உதவி செய்தல்
5. அளவுகடந்த அதிக ஆசை கொள்ளாமல் இருத்தல்

வாழ்வில் பேணப்பட வேண்டியவைகளில் சில:

வாழ்வில் பேணப்பட வேண்டியவைகளில் சில:
1. மனதை ஒருமுகப்படுத்தி இறைதியானம் புரிதல்
2. சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இன்முகத்துடன் முகமன் கூறல்
3. யாரையும் துச்சமென கருதாமல் பிறர் கூறும் கருத்துக்களையும் செவி கொடுத்து கேட்டல்
4. எந்த செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன் அதனால் விளையும் பயன் மற்றும் கெடுதலைக் குறித்து சிந்தித்தல்
5. முடிந்தவரை தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்த்து மவுனம் கடைபிடித்தல்

நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது

நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.

தீமைசெய்தோரை மன்னியுங்கள்

1. வீண் பேச்சு பேசாதீர்.2.பாவங்;களை தவிர்ந்து கொள்ளுங்கள்.4. நீதி நேர்மையோடு வாழுங்கள். பிறர் மனம் புண்படும்டி நடவாதீர்கள்.5. ஏழைகளை மேலாக மதியுங்கள்.7. உறவினர்களை அரவணைத்துக் கொள்ளுங்கள்.8. அநியாயம் செய்தோருக்கு அருள் புரியுங்கள். தீமைசெய்தோரை மன்னியுங்கள்.9. உங்களால் பிறருக்குத்தொல்லை ஏற்படின் மன்னிப்புக் கேளுங்கள்.10. உங்கள் பொன்னான நேரங்களை அல்லாஹவை வணங்குவதிலும்,இறைஞ்சுவதிலும் பொருளீட்டுவதிலும்,தமது மனைவி,மக்கள், சமூகத்தாரின் கடமைகளை நிறைவேற்றுவதிலும் செலவிடுங்கள்.

அவன் விட்டுச் சென்ற மூன்றைத்

ஒருவன் மரணித்து விட்டால் பின்னர் இவ்வுலகோடு அவனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை - அவன் விட்டுச் சென்ற மூன்றைத் தவிர:
1. பயனுள்ள கல்வி
2. நிலையான தர்மம்3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் பிள்ளைகள்